காணொளி: வயநாட்டில் ஏற்பட்ட மண்சரிவின் சிசிடிவி காட்சி

காணொளிக் குறிப்பு,
காணொளி: வயநாட்டில் ஏற்பட்ட மண்சரிவின் சிசிடிவி காட்சி
பிரசுரிக்கப்பட்டது

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி அருகே உள்ள கல்லாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை அன்று மண்சரிவு ஏற்பட்டது.

மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் சுரங்கப்பாதை சாலைத் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வந்த கல்லாடிப் பகுதியிலுள்ள மீனாட்சிப் பாலத்திற்கு அருகே இந்த மண்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு