காணொளி: வீட்டின் மொட்டை மாடியில் உலா வந்த கரடி
காணொளி: வீட்டின் மொட்டை மாடியில் உலா வந்த கரடி
பிரசுரிக்கப்பட்டது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஓட்டுபட்டரை வள்ளுவர் நகர் பகுதியில், பகல் நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் கரடி ஒன்று நுழைந்தது.
வீட்டின் மாடியில் ஏறிச் சென்ற கரடியை கண்ட நபர் ஒருவர் அங்கிருந்த குடியிருப்புவாசிகளை எச்சரித்தார். அவர் எடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பு வராத வகையில் கரடியின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



